இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க "பல்லாஜியோ கொழும்பு" முதன்மையான விளையாட்டு அரங்கம்


ஸ்ரீலங்கா ஓர் வேகமாக வளர்ந்துவரும் நாடு. இது இந்தியர்களால் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளாலும் மிகவும் விரும்பப்படும் ஓர் பயண இலக்கு நாடு ஆகும்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் தி கிங்ஸ்பரி ஹோட்டல் ஆகியவற்றுடன் இணைந்து தற்போது ‘பல்லாஜியோ கேசினோ கொழும்பு’ எனும் இரவு கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கோவையிலுள்ள தி லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆடல், பாடல் நிகழ்ச்சியை தென்னகத் திரை நட்சத்திரம் “செல்வி ரகசியா”, தனது மும்பை நடனக் குழுவினருடன் இணைந்து நடத்தினார். 



‘பல்லாஜியோ கொழும்பு’ கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தரப்படும் வசதிகள், சேவைகள் புதிய விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் மீண்டும் மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வரத்தூண்டும் வகையில் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது. நாட்டிலேயே மிகவும் பெரிதுமான, வசதியானதுமான விளையாட்டு சேவையை வழங்கும் ‘பல்லாஜியோ கொழும்பு’, பல்வேறு விளையாட்டுக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.



இங்கு, தினசரி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாச்சார நடனங்கள், கேளிக்கை இரவுகள் என ஆண்டுமுழுவதும் இங்கு வரும் விருந்தினர்களை உற்சாகப்படுத்துவதற்கான நிகழ்வுகள் தொடர்கின்றன.

இங்கு விளையாட்டுக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் எவ்விதமான கட்டுப்பாடும் அளவுகோலும் வரையறுக்கப்படுவதில்லை. 

அதிகாரப்பூர்வமான விமான நிறுவனம்:- 

உலக அளவிலான விமான சேவையில் தனது சிறப்பான சேவையை வழங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த ஜூலை மாதம் முதல் தென்னிந்திய நகரங்களான ஹைதராபாத், கோவை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது.



இதற்குமுன்னர், சென்னையில் இருந்து 35 விமானங்கள் கொழும்புவிற்கு ஒவ்வொரு வாரமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விரிவுபடுத்தப்பட்ட விமான சேவையின் மூலமாக இந்தியர்களுக்கும் இலங்கைவாசிகளுக்கும் இடையேயுள்ள மகிழ்ச்சியான உறவுப்பாலம் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...